"N" வகை குடும்ப அட்டையினை 2017-ம் ஆண்டுக்கு புதுப்பித்துக்கொள்ள இணையதள முகவரி அறிமுகம்

கோவை மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் எப்பொருளும் வேண்டாதோருக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளை நிறமுடைய "N" குடும்ப அட்டைகளை 2017ம் ஆண்டுக்கு புதுப்பித்துக் கொள்வதற்கு ஏதுவாக www.tnpds.com என்னும் இணையதள முகவரியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

"N" குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையில் உள்ள விற்பனை முனையத்தில் தங்களது "N" குடும்ப அட்டையினை பதிவுசெய்துகொள்ளலாம். 

அல்லது, "N" குடும்ப அட்டைதாரர்கள் www.tnpds.com என்ற இணையதள முகவரியின் முகப்பில் "பயனுள்ள இணைப்புகள்" என்ற தலைப்பின் கீழ் காணப்படும் "N" கார்டு புதுப்பித்தல் தாள் என்ற இணைப்பில் "N"  குடும்ப அட்டையை பதிவு செய்த பின்னர் "N" குடும்ப அட்டை 1.1.2017 முதல் 31.12.2017 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது என்ற சீட்டு அச்சிட்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தல் ஒப்புகை சீட்டினை "N" குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டி பராமரிக்கப்பட வேண்டும். இத்தகைய காலநீட்டிப்பு பதிவுச்சீட்டு ஒட்டப்பட்டுள்ள குடும்ப அட்டைகள் மட்டுமே நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளாக கருதப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...