சங்கரா கல்லூரியில் சமையல் துறை மாணவர்களுக்கான சங்கரா மாஸ்டர் ப்ரிகேடு 2017 என்னும் சமையல் போட்டி நடைபெற்றது


தேசிய அளவிளான மாஸ்டர் ப்ரிகேடு 2017 என்னும் சமையல் துறை மாணவர்களுக்கான சமையல் போட்டி, சங்கரா கல்லூரியின் சமையல் துறை சார்பில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா முழுவதுமிருந்து சமையல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்று தங்களது சமையல் திறமைகளை வெளிப்படுத்தினர்.



இப்போட்டியானது பங்குபெறுவோரின் சமையல் திறன், படைப்பாற்றல் மற்றும் குழுவாக செயல்படுவது ஆகிய திறன்களை சோதிக்கும் விதமாக நடத்தப்பட்டது.



பழங்கள் மற்றும் காய்கறிகளில் சிற்பம் செதுக்குதல், இரும்பு சமையலர், போன் கிளேசியர், வினாடி-வினா போட்டி, கட்டுரை சமர்ப்பித்தல், கேக்குகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரவுகளின் கீழ் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



கொச்சினில் உள்ள ட்ரிடன்ட் ஓபராய் நட்சத்திர உணவு விடுதியின் தலைமை சமையலராக இருக்கம் பி.குமரன், கோவை லீ மெரிடியன் நட்சத்திர விடுதியின் தலைமை சமையலர் அப்துல் ரகுமான் ஆகியோர் மாணவர்கள் சமைத்த உணவுகளை ருசித்து சிறந்த உணவைச் சமைத்த மாணவருக்கு பரிசினை வழங்கினர்.



இதில் முதல் பரிசை பெங்களூரைச் சேர்ந்த க்ரைஸ்ட் பல்கலைக் கழக மாணவர்களும், இரண்டாம் பரிசை சென்னிஸ் விடுதி மேலாண்மை கல்லூரி மாணவர்களும் வென்றனர். சுழற்கோப்பையை க்ரைஸ்ட் பல்கலைக் கழக மாணவர்கள் வென்றனர்.

சங்கரா கல்விக் குழுமங்களின் இணைச் செயலாளர் சந்தியா ராமச்சந்திரன், துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...