டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (11.02.2017) நடைபெற்றது. 

 

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் தெரிவிக்கையில் “கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட அனைத்து 100 வார்டுகளிலும் டெங்கு தொடர்பான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் சுகாதார அலுவலர்கள் மற்றும் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று நீர்தேக்க தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுவதும், தேவையற்ற பொருட்களான பழைய டயர்கள், உபயோகமற்ற மண் பாண்டங்கள், குடங்கள், ஆட்டுகல், பூங்தொட்டிகள், தேங்காய் ஓடுகள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் போன்ற தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டும் மற்றும் டெங்கு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொண்டும் வருகிறார்கள். மேலும், மாநகராட்சி புகை வண்டி வாகனங்கள் மூலம் அனைத்து வார்டு பகுதிகளுக்கு சென்று புகை மருந்தும் அடித்து வருகிறார்கள். 

மேலும், குறிப்பாக பொது மக்கள் தங்கள் வீட்டை சுற்றியும், வீடுகளில் உள்ள பிரிஜ், அழகுக்காக வளர்க்கப்படும் செடிகள் வைக்கப்படும் பூந்தொட்டிகள், மணிபிளேண்ட் ஆகியவற்றில் உள்ள தண்ணீரினால் கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் உள்ளது. எனவே, அவற்றை வாரம் ஒருமுறை தூய்மை செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டும், வீடு மாடியிலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் அனைத்து வார்டு பகுதிகளிலும் சிறப்புத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினந்தோறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு செல்லும் டி.பி.சி பணியாளர்கள் பணிக்கு செல்வதற்கு முன்பு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய முறை குறித்து உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், கொசு மருந்து ஊற்ற வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு பொது மக்கள் தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும். வீட்டைச் சுற்றியும், மாடியிலும் தேவையற்ற பொருட்களை போட வேண்டாம், தண்ணீரை காற்றுப் புகாத வண்ணம் மூடி வைக்கவும் அல்லது துணிகளைக் கொண்டு கட்டி வைக்கவேண்டும். மேலும், குடிதண்ணீரில் குளோரின் அளவு சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறு மாநகராட்சிப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொது மக்களுக்கு காய்ச்சல் அறிகுறி ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், அனைத்து சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...