டோனி & கை-யின் புதிய அழகு நிலையக் கிளை ஈரோட்டில் திறப்பு


டோனி & கை எஸ்சென்சுவல்ஸ் என்பது ஒரு சர்வதேச அழகு நிலையமாகும். தற்போது தமிழகத்தில் டோனி & கை-யின் 110-வது அழகு நிலையக்கிளை ஈரோட்டில் இன்று துவங்கப்பட்டது. 



டோனி & கை ஈரோடு புதிய கிளையினை திரைப்பட நடிகை ஸ்ருஸ்டி தாங்கே, இன்று துவக்கி வைத்தார். இம்மையத்தின் மூலம் மக்கள் தங்களை அழகுபடுத்திக் கொண்டு அதன் மூலம் தங்களை சிறப்பாக உணரமுடியும்.

இத்துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக டோனி & கை நிறுவனத்துடைய இந்திய நாட்டின் மாஸ்டர் பிரான்சிஸ் சேம் பால், பால்சன்ஸ் குழுமத்தின் சிஇஓ ப்ளஸ்சிங் ஏ மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.



இந்த அழகு நிலையமானது ஈரோட்டில் உள்ள ரிலையன்ஸ் மாளின் எதிரே மிகச் சிறப்பாக 1800 சதுரடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையத்தில் பல்வேறு விதமான முடி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட சேவைகளும் இருபாலினருக்கும் வழங்கப்படவுள்ளது. முடி திருத்துதல், இரசாயனங்கள் கொண்டு அழகுபடுத்துதல், மேணிக்யூர், கெராட்டின், மேக்கப், ஹேர்ஸ்பா மற்றும முடியை நேராக்குதல் ஆகிய சேவையினை இளம் தலைமுறையினர் விரும்பி பெருகின்றனர் என ஈரோடு டோனி & கை-யின் நிர்வாக இயக்குநர் கார்த்திக் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...