வேளாண் பல்கலைக்கழகத்தில் பண்ணை இயந்திரவியல் கண்காட்சி


கோவையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் கண்காட்சியாக வேளாண்மைக்கு தேவையான இயந்திரவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 



இந்த கண்காட்சியில் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தயாரித்த பல்வேறு இயந்திரங்கள் பொதுமக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் வேளாண் துறையை இயந்திர மயமாக்குவதற்கும், மனித சக்தியை அதிகம் செலவிடாமல் முழுக்க முழுக்க இயந்திரங்களை கொண்டே விவசாயம் செய்ய ஏதுவாக பல இயந்திரங்கள் கண்காட்சிக்கு வைக்கபட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். 







இந்த கண்காட்சி குறித்து விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், 'நான் சேலம் மாவட்டத்தில் இருந்து வருகிறேன். எனக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் தற்போது வாழை பயிரிட்டுள்ளேன், வேளாண் அறிவியல் மையம் சார்பில் எங்களை இந்த கண்காட்சிக்கு அழைத்து வந்தனர். மண் கட்டிகளை பொடியாக்கும் இயந்திரத்தை வாங்குவதற்காக இங்கு வந்துள்ளேன். கட்டியான மண்ணில் விவசாயம் செய்வதை விட, பொடியாக இருக்கும் மண்ணில் விவசாயம் செய்யும் போது மகசூல் அதிகரிக்கும். இக்கண்காட்சியில் அந்த வகையிலான பல இயந்திரங்கள் உள்ளன. மிகவும் உபயோகமாக உள்ளது இக் கண்காட்சி'

இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...