டாக்சி ஓட்டுனர்கள் வாடகை கட்டணத்தை அதிகப்படுத்த கோரி அந்நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகை

கோவையில் டாக்சி ஓட்டுனர்கள் வாடகை கட்டணத்தை அதிகப்படுத்தி வழங்க கோரி தனியார் டாக்சி ஓட்டுனர்கள் அண்ணா சிலை அருகில் உள்ள அந்நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்ட்த்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் உபர் என்னும் பெயரில் தனியார் கால் டாக்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவையில் இந்த நிறுவனத்துடன் இணைந்து  இரண்டாயிரத்துக்கும் அதிகமான டாக்சி உரிமையாளர்கள் கால் டாக்சி ஓட்டி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு வழங்கப்படும் வாடகை கட்டணத்தை குறைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் ஊக்க தொகையையும் குறைத்துள்ளது. இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் கோவை அண்ணா சிலை அருகில் உள்ள உபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கட்டண மாற்றம் குறித்த தங்கள் முடிவை நிர்வாகம் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், ஊக்க தொகையை அதிகப்படுத்தி தர வேண்டும் எனவும் உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...