பழங்குடியினர் பள்ளிகளில் நியமனம் செய்ய ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு

11.02.2017 வரும் சனிக்கிழமை அன்று தகுதி வாய்ந்த முதுகலை/ இளங்கலை/ இடைநிலை பழங்குடியினர் இன ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பழங்குடியினர் பள்ளிகளில் நியமனம் செய்ய ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. இதில் திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இனத்தை சேர்ந்த தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறார்கள். 

மேலும், தேர்வினில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் காலை 8:00 மணிக்கு வர வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் (D.T.Ed/B.Ed/M.Ed)  சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடுப்ப அட்டை, ஆசிரியர் தகுதி தேர்வு பெற்றிருப்பின் அதன் சான்றிதழ், இதர பள்ளிகளில் பணியாற்றிருப்பின் முன் அனுபவச் சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு அட்டை போன்றவையின் அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்களுடன் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...