விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சி பி ஐ எம் கட்சியினர் கைது


விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் காந்திபுரம், சுந்தராபுரம் உள்ளிட்ட பத்து இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில், காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது வறட்சி கடுமையாக பாதித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பாலபாரதி குற்றம்சாட்டினார். 

மேலும், தமிழக அரசு செயல்படாமல் இருப்பதாக கூறிய அவர், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினர். 

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 83 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதேபோல கோவை மாவட்டத்தில் பத்து இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...