100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலை வழங்க கோரி மசாண்டிபாளையம் கிராம மக்கள் மனு


கோவை மாவட்டம், காரேகவுண்டம்பாளையம் பகுதி 7-வது வார்டுக்குட்பட்ட மசாண்டிபாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலை வழங்க கோரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்தனர். 



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மசாண்டிபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. அதில் 320-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ள குடுப்பதாரர்களும் உள்ளனர். 

எங்கள் ஊரில் குளம், குட்டைகள் அனைத்தும் உள்ளன. ஆனால் எவ்வித பராமரிப்பும் செய்யப்படவில்லை. மேலும், சில வருடகாலமாகவே எவ்வித வேலைவாய்ப்பும் இன்றி நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம்.

எனவே, எங்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமாக வேலை வழங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...