மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்கக் கோரி மேல்முடுதுறை மக்கள் ஆட்சியரிடம் மனு


குடிநீர் இன்றி மிகுந்த சிரமப்படுவதாகவும், உடனடியாக மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்கக் கோரியும் மேல்முடுதுறை மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மேல்முடுதுறை பகுதியில் சுமார் 15 குடும்பங்கள் கடந்த 10 வருடத்திற்கும் மேல் வசித்து வருகிறோம். எங்களுக்கு பஞ்சாயத்து துறையின் மூலம் நிலத்தடி நீர் அமைத்து தண்ணீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிலத்தடி ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் முழுமையாக தடைபட்ட காரணத்தாலும், மோட்டார் பழுதடைத்துள்ளதாலும் கடந்த 5 மாதங்களாக தண்ணீருக்கு மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

தண்ணீருக்காக பக்கத்து ஊர்களான கவுண்டம்பாளையம், காரணூர், கனுவக்கறை போன்ற ஊர்களுக்கு சென்று தண்ணீர் கொண்டு வருகிறோம். 

இப்பிரச்சனை குறித்து முடுதுறை செயல்அலுவலர், காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம் குடிநீர் வடிகால்வாரியம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மனு அளித்தும் பயனில்லை.

மேலும், எங்கள் ஊரிலேயே 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட ஆற்று நீர் தேக்கத்தொட்டியும் நீர் ஊற்று நிலையமும் அமைத்து பக்கத்து ஊர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வளவு பெரிய நீர்தேக்கத் தொட்டி இருந்தும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பகுதி மக்கள் பயனடையும் வகையில் குடிநீருக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...