பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில் உள்ள கேரளா சமாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது.


பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை,மஞ்சகண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பனை கட்டி வருகிறது.பவானி ஆற்றின் குறுக்கே அனைகட்டி தண்ணீர் தேக்குவதால் கோவை,திருப்பூர்,ஈரோடு,கரூர் மாவட்டங்களில் தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் என்பதால கேரள அரசு இதனை கைவிட வேண்டும் என கோரி தடுப்பனை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.

கடந்த 29ம் தேதி த.பெ.தி.க, காங்கரஸ், தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் விவசாய சங்கங்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு ஆனைகட்டி அருகே முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இன்று கோவை நூறடி சாலையில் உள்ள கேரளா சமாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த 20கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதனை தொடர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் 100 அடி சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து ஏற்பட்டதை  தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலிஸார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...