பொதுத்துறை மருந்து நிறுவனங்களை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

பொதுத்துறை  மருந்து நிறுவனங்கள் பாதுகாப்பு, உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை கட்டுபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

நோய் தீர்க்கும் மருந்துகளின் விலையேற்றத்தால்  பொதுமக்கள் பயன்படுத்தும் மருந்து பொருட்களின் விலை  பன்மடங்காக உயர்ந்துள்ளதை கட்டுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொருள் மற்றும் சேவை வரியை மருந்துகள் மீது விதிக்கக்கூடாது,அன்னிய முதலீட்டை கட்டுபடுத்துதல், ஆன் லைன் மருத்துவ விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் ஜாகீர் ஹுசேன் கூறும்போது, கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவ துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் சாமானிய மக்களின் நோய் போக்கும் வழிவகை செய்யாமல் கார்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் வகையில் அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், மருத்துவ துறையில் 100 சதவிகித அந்நிய முதலீடு என்பது மருத்துவ துறையில் அடைந்த சுயசார்பை பாதித்து பன்னாட்டு நிறுவனங்களின் தயவில் வாழ வழி செய்துவிடும் என்பதால் மக்களுக்கு சாதகமான மருந்து கொள்கை அளிக்க வேண்டும் என கூறினார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...