பொதுத்துறை மருந்து நிறுவனங்களை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

பொதுத்துறை  மருந்து நிறுவனங்கள் பாதுகாப்பு, உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை கட்டுபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

நோய் தீர்க்கும் மருந்துகளின் விலையேற்றத்தால்  பொதுமக்கள் பயன்படுத்தும் மருந்து பொருட்களின் விலை  பன்மடங்காக உயர்ந்துள்ளதை கட்டுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொருள் மற்றும் சேவை வரியை மருந்துகள் மீது விதிக்கக்கூடாது,அன்னிய முதலீட்டை கட்டுபடுத்துதல், ஆன் லைன் மருத்துவ விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் ஜாகீர் ஹுசேன் கூறும்போது, கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவ துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் சாமானிய மக்களின் நோய் போக்கும் வழிவகை செய்யாமல் கார்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் வகையில் அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், மருத்துவ துறையில் 100 சதவிகித அந்நிய முதலீடு என்பது மருத்துவ துறையில் அடைந்த சுயசார்பை பாதித்து பன்னாட்டு நிறுவனங்களின் தயவில் வாழ வழி செய்துவிடும் என்பதால் மக்களுக்கு சாதகமான மருந்து கொள்கை அளிக்க வேண்டும் என கூறினார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...