ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மாதிரி சாலைகளை மாநகராட்சி ஆணையர் (பொ) ஆய்வு


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடு சாலையில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கான இடங்களில் முதற்கட்டப் பணிகளான குறியீடு பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவிக்கையில் "கோவை மாநகராட்சியில் 6 இடங்களில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

ஆர்.எஸ். புரத்தில் டி.பி.சாலை மற்றும் திருவேங்கடசாமி சாலை, திவான் பகதூர் சாலை, சாய்பாபா காலனியில் என்.எஸ்.ஆர் சாலை, ரேஸ் கோர்ஸ் சுற்றுச்சாலை, சங்கனூர் மெயின் ரோடு, மசக்காளிப்பாளையம் மெயின் ரோடு ஆகிய இடங்களில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

அதன் தொடர்ச்சியாக ஆரம்பகட்ட செயலாக்கமாக ஆர்.எஸ்புரம் டி.பி.ரோடு சாலை (1.8 கிலோ மீட்டர்) மற்றும் திருவேங்கடசாமி சாலை (1.2 கிலோ மீட்டர்)யில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கான இடங்களில் முதற்கட்டப் பணிகளான குறியீடு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த மாதிரி சாலைகள் கண்டுள்ள வாகன நிறுத்தும் இடம், நடைபாதை, சென்டர் மீடியன் ஆகியவை குறியீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

மேலும், இந்த மாதிரி சாலைகளில் புட் பாத், மின்சார ஒயர்களுக்கான டிரென்ச் மற்றும் டக்ட், பி.எஸ்.என்.எல், தனியார் வடங்கள், வீடுகளுக்கான குடிநீர் பைப், டிராபிக் ரெகுலேசன் தொடர்பான போலீஸ் கேபில் லைன்கள், தெரு விளக்குகள், உயர்மட்ட கோபுர விளக்குகள் ஆகியவை செல்வதற்கான தனியான பொது டக்ட் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக பார்க்கிங், சிறப்பு நவீன கழிப்பிட வசதி, நவீனமயமான குப்பைத்தொட்டிகள், புதிய மரங்கள் நடுதல், சிறப்பு மாதிரி சாலைகளை ஒட்டி தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், சிறப்பு மருத்துவ உதவி மையம், ஜியோ டாகிங், ஒய்பை வசதி, வாகனத்தின் வேகங்களை கண்டறியும் கருவி, குடிநீர் வசதி, சுற்றுப்புற மாசு கண்டறியும் கருவி, அனைத்து வசதிகள் கூடிய ஸ்மார்ட் போல்ஸ், சாலைகளை கடக்கும் நடைபாதை வசதி, குறிப்பிட்ட இடவெளியில் மழைநீர் சேகரிக்கும் சிறப்பு ஆழ்துளைக் கிணறு அமைப்பு, அவசர ஊர்தி வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடம் ஆகிய வசதிகள் இந்த மாதிரி சாலைகளில் ஏற்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான முதற்கட்டப் பணிகளான மாதிரி சாலைகளான ஆர்.எஸ்புரம் டி.பி.ரோடு மற்றும் திருவேங்கடசாமி சாலைகளில் குறியீடு பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், இளநிலைப் பொறியாளர் தியாகராஜன், ஆலோசகர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...