மூன்று மாதத்திற்குள் நம் நகரத்தில் மாதிரி சாலை அமைக்கும் பணியில் கோவை மாநகராட்சி தீவிரம்


கோவை மாநகராட்சி மூன்று மாதங்களில் மாதிரி சாலைகளுக்கான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நமக்குக்கிடைத்த தகவலின்படி கோவை மாநகராட்சி பி.எஸ்.என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடன் இணைந்து ஆர்.எஸ்.புரத்தில் உள்ள டி.பி. சாலை, டி.வி.சுவாமி சாலை ஆகிய பகுதிகளில் இந்த மாதிரி சாலைகளை அமைக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.

இந்த பணியின் போது மின்சாரம் மற்றும் தொலைபேசி வடங்கள் நேர்கோட்டில் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

கோவை மாநகராட்சி, இன்ஸ்டியூட் ஃபார் டிரேன்ஸ்பர்டேஷன் அன்டு டெவலப்மென்ட் பாலிசியுடன் இணைந்து டி.பி.சாலையில் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கும், டி.வி.சுவாமி சாலையில் 1.20 கிலோ மீட்டர் தூரத்திற்கும் இந்த மாதிரி சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்பணியின் போது சாலையோரத்தில் உள்ள மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்களை நிலத்தடியில் பதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், ஒரே மாதிரியான தகவல் பலகைகளையும், மற்றும் போக்குவரத்து சந்திப்புகளையும் ஒரேமாதிரியாக வடிவமைத்து வாகனங்கள் எளிதாக திரும்புவதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...