பாரதியார் பல்கலை.யில் வரலாற்றுக்கு முற்பட்ட தொல்பொருளியல் குறித்து சிறப்பு விரிவுரை நடைபெற்றது


பாரதியார் பல்கலைக் கழகத்தின் வரலாறு மற்றும் சுற்றுலாத் துறையின் சார்பில் வரலாறு சார்ந்த பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு விரிவுரைகள் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் முதற்பகுதியாக வரலாற்றுக்கு முற்பட்ட தொல்பொருளியல் என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை வரலாற்றுத் துறையின் முதலாம் ஆண்டு வகுப்பறையில் நடைபெற்றது.



இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் பழங்குடியினர் ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரான முனைவர் மகேஸ்வரன் பங்கேற்றார். 

இதில், வரலாற்றுத் துறையின் தலைவர் முனைவர் பூபதி (பொறுப்பு) சிறப்பு விரிவுரையாளரை வரவேற்று உரை நிகழ்த்தி, துறையின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.

இதைத்தொடர்ந்து மகேஸ்வரன் தனது உரையின் துவக்கத்தில் தொல்பொருளியல் குறித்தும், அத்துறையில் வரலாறு பயிலும் மாணாக்கருக்குள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றியும் விளக்கினார். 

பின், வரலாற்றுக்கு முற்பட்ட காலம், அதன் பிரிவுகள், அதன் பல்வேறு கூறுகள், அக்கால மக்களின் வாழ்வியல் குறித்து நமக்குக் கிடைத்த சான்றுகள் பற்றி விரிவுரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல்வேறு அரும்பொருட்களின் புகைப்படங்களைக் காட்டி, பல தகவல்கள் வழங்கப்பட்டன.

மேலும், மாணவ, மாணவியர் அரும்பொருட்கள் சேகரிப்பில் பங்கேற்று ஓர் அருங்காட்சியகம் அமைக்க முனைவர் மகேஸ்வரன் ஊக்கப்படுத்தினார். 

நிறைவாக வரலாறு மற்றும் சுற்றுலாத்துறையின் விரிவுரையாளரான சங்கீதா நன்றியுரை வழங்கினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...