வால்பாறை எஸ்டேட் பகுதியில் தொடரும் யானைகள் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்


வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள எஸ்டேட் வழக்கறிஞர் அருண் கோவிந் என்பவரது வீட்டை சுமார் 8 யானைகள் கொண்ட காட்டு யானைக்கூட்டம் இன்று அதிகாலை 5 மணியளவில் முற்றுகையிட்டது.

 

இதில் அவரது வீட்டின் கதவை உடைத்து குட்டியானை ஒன்று உள்ளே நுழைந்ததால் மற்ற யானைகள் வீட்டின் ஜன்னல் வழியாக மிக்ஸி, கேஸ் ஸ்டவ், கிரைண்டர் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது.



 

இதைத்தொடந்து, வீட்டில் தனியாக இருந்த வழக்கறிஞர் அருண் கோவிந் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கும் வனத்துரையினருக்கும் தகவல் தெரிவித்ததைத் தொடந்து, ஊர் பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் யானைகளை காட்டிற்குள் விரட்டினர். 

தொடர்ந்து வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தவண்ணம் உள்ளதால் எஸ்டேட் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். 

மேலும், காட்டு யானை வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளான தாய்முடி, நல்லமுடி, ஆனைமுடி, ஈட்டியார் போன்ற பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...