வால்பாறை எஸ்டேட் பகுதியில் தொடரும் யானைகள் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்


வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள எஸ்டேட் வழக்கறிஞர் அருண் கோவிந் என்பவரது வீட்டை சுமார் 8 யானைகள் கொண்ட காட்டு யானைக்கூட்டம் இன்று அதிகாலை 5 மணியளவில் முற்றுகையிட்டது.

 

இதில் அவரது வீட்டின் கதவை உடைத்து குட்டியானை ஒன்று உள்ளே நுழைந்ததால் மற்ற யானைகள் வீட்டின் ஜன்னல் வழியாக மிக்ஸி, கேஸ் ஸ்டவ், கிரைண்டர் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது.



 

இதைத்தொடந்து, வீட்டில் தனியாக இருந்த வழக்கறிஞர் அருண் கோவிந் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கும் வனத்துரையினருக்கும் தகவல் தெரிவித்ததைத் தொடந்து, ஊர் பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் யானைகளை காட்டிற்குள் விரட்டினர். 

தொடர்ந்து வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தவண்ணம் உள்ளதால் எஸ்டேட் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். 

மேலும், காட்டு யானை வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளான தாய்முடி, நல்லமுடி, ஆனைமுடி, ஈட்டியார் போன்ற பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு வருகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...