திருநாவுக்கரசரின் கருத்து ஆதாரமற்றது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை கோவையில் பேட்டி

தமிழக அரசை மத்திய அரசு கட்டுக்குள் வைத்திருக்கின்றது என்ற காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் கொலை செய்யப்பட்ட பா.ஜ.க பிரமுகர் முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விமானம் மூலம் கோவை வந்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழகத்தில் பா.ஜ.க வினை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் இதுவரை யாருமே கைது செய்யப்பட வில்லை எனவும் தற்போது திருப்பூரில் கொலை செய்யப்பட்டுள்ள முத்துவின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுவதாகவும் கூறினார். இறந்த முத்துவின் உடல் அருகே பிரதமர் மோடியின் படமும், பா.ஜ.க கொடியும் அவமதிப்பு செய்யப்பட்டு இருந்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் முத்து மரணத்துக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக  மத்திய அரசின் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் மாநில அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளித்ததாக குறிப்பிட்டதுடன் இதற்காக தமிழக முதல்வர், பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் நிலையில் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, அதற்கு எதிர்மறையாக பேசுவது ஏன் என தெரியவில்லை எனவும் ஆனால் மக்களுக்கு உண்மை நிலை புரியும் எனவும் தெரிவித்தார். இதே போல தமிழக அரசை மத்திய அரசு கட்டுக்குள் வைத்திருக்கின்றது என்ற காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் கருத்து அடிபப்டை ஆதாரமற்றது எனவும் தமிழிசை சவுந்திராஜன் பதிலளித்தார்.

Newsletter

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...