அவிலா மேல்நிலை பள்ளி பொன் விழா ஆண்டை முன்னிட்டு இந்தியாவிலேயே பள்ளியில் முதன் முறையாக கல்வி பயன்பாட்டிற்கான மனித வடிவிலான இயந்திரமனிதன்


1967ம் ஆண்டு கோவையில் துவங்கப்பட்ட அவிலா பள்ளியின் பொன் விழா வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவிலா பள்ளியின் நிர்வாகத்தினர் கூறும்போது, கிணத்துக்கடவு பகுதியில் வீடு இல்லாத ஏழை பொதுமக்கள் 12 பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 1400-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 7 பேருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கபட்டு அவர்களது மருத்துவ செலவை நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.

மேலும், மாற்றுத் திறனாளிகளின் மருத்துவ செலவு மற்றும் திருமண உதவித் தொகையாக 5 லட்சமும் கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்வாதாரம் மேம்படுத்த 15 லட்ச ரூபாய் வரை செலவிடப்பட்டு பள்ளி கல்வி சேவையை கடந்து பொதுமக்களுக்கு ஏராளமான சேவைகள் செய்து வருவதாக கூறினர். 

மேலும், இந்த பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியாவிலேயே பள்ளியில் முதன் முறையாக மனித வடிவிலான இயந்திர மனிதன் கல்வி பயன்பாட்டிற்கு உபயோக்க உள்ளதாகவும் 28ம் தேதி அன்று பள்ளியில் இதன் செயல் முறை விளக்கம் அளிக்கபட உள்ளதாக கூறினர்.

விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி குரியன் ஜோசப், உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பள்ளி கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், கோவை மாநகர ராமநாதபுரம் பகுதி மறைமாவட்டதின் ஆயர் பால் அலபாட், ஏடிஜிபி சைலேந்திரபாபு, மாநகர ஆணையர் அமல்ராஜ் உள்ளிடோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...