அவிலா மேல்நிலை பள்ளி பொன் விழா ஆண்டை முன்னிட்டு இந்தியாவிலேயே பள்ளியில் முதன் முறையாக கல்வி பயன்பாட்டிற்கான மனித வடிவிலான இயந்திரமனிதன்


1967ம் ஆண்டு கோவையில் துவங்கப்பட்ட அவிலா பள்ளியின் பொன் விழா வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவிலா பள்ளியின் நிர்வாகத்தினர் கூறும்போது, கிணத்துக்கடவு பகுதியில் வீடு இல்லாத ஏழை பொதுமக்கள் 12 பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 1400-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 7 பேருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கபட்டு அவர்களது மருத்துவ செலவை நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.

மேலும், மாற்றுத் திறனாளிகளின் மருத்துவ செலவு மற்றும் திருமண உதவித் தொகையாக 5 லட்சமும் கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்வாதாரம் மேம்படுத்த 15 லட்ச ரூபாய் வரை செலவிடப்பட்டு பள்ளி கல்வி சேவையை கடந்து பொதுமக்களுக்கு ஏராளமான சேவைகள் செய்து வருவதாக கூறினர். 

மேலும், இந்த பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியாவிலேயே பள்ளியில் முதன் முறையாக மனித வடிவிலான இயந்திர மனிதன் கல்வி பயன்பாட்டிற்கு உபயோக்க உள்ளதாகவும் 28ம் தேதி அன்று பள்ளியில் இதன் செயல் முறை விளக்கம் அளிக்கபட உள்ளதாக கூறினர்.

விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி குரியன் ஜோசப், உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பள்ளி கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், கோவை மாநகர ராமநாதபுரம் பகுதி மறைமாவட்டதின் ஆயர் பால் அலபாட், ஏடிஜிபி சைலேந்திரபாபு, மாநகர ஆணையர் அமல்ராஜ் உள்ளிடோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...