கோவையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் - 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!


ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு அரசுத் தரப்பில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டும், நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கூறி போராட்டத்தினை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று போராட்டத்தை கைவிடுமாறு கூறிவந்த காவல்துறையினர் திடீரென போராட்டக்காரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். 

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரின் மீதும் தாக்குதல் நடத்தியதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கோவை, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்களத்தின் அருகே குவிக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், மாணவர்களோ அரசுத் தரப்பில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டும், மத்திய அரசாங்கம் ஜல்லிக்கட்டின் மீது இருக்கும் தடை முற்றிலுமாக நீக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்தனர். 

இதையடுத்து, போலீசார் மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனால் போராட்ட களத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, போலீசார் தடியடி மேற்கொண்டனர். பின்பு, சற்று நேரத்தில் போராட்டக்காரர்கள் வ.உ.சி. மைதானத்தில் இருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...