கோவையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் - 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!


ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு அரசுத் தரப்பில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டும், நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கூறி போராட்டத்தினை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று போராட்டத்தை கைவிடுமாறு கூறிவந்த காவல்துறையினர் திடீரென போராட்டக்காரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். 

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரின் மீதும் தாக்குதல் நடத்தியதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கோவை, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்களத்தின் அருகே குவிக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், மாணவர்களோ அரசுத் தரப்பில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டும், மத்திய அரசாங்கம் ஜல்லிக்கட்டின் மீது இருக்கும் தடை முற்றிலுமாக நீக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்தனர். 

இதையடுத்து, போலீசார் மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனால் போராட்ட களத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, போலீசார் தடியடி மேற்கொண்டனர். பின்பு, சற்று நேரத்தில் போராட்டக்காரர்கள் வ.உ.சி. மைதானத்தில் இருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...