தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கண்டு கண்ணீர் வடித்த வானம்!

தமிழகத்தில் 6வது நாளாக தொடரும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு தொடர் போராட்டதில் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில்  கனமழை பெய்தது. எனினும் போராட்டக்காரர்கள் மழையினை பொருட்படுத்தாமல் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை வஉசி மைதானத்தில் நேற்று விடிய விடிய கொட்டிய மழையிலும் தங்களது போராட்டத்தை கைவிடாமல் நடத்தி வருகின்றனர்.



சனிக்கிழமை நாளான நேற்று பள்ளிகள் விடுமுறை என்பதால் கோவை வஉசி மைதானத்தில் குழந்தைகளுடன் குவிந்த பெற்றோர்கள். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டத்தில் இன்று பெண்களின் கூட்டம் அலைமோதியது. போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகையில் இரவில் தீடீர் மழை குறுக்கிட்டதால், மழையினையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலர் போராட்டத்தை கைவிடாமல் கோஷங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தினர்.



மழையில் பொதுமக்கள் போராடுவதை கண்டு தன்னார்வலர்கள் பலர் குடைகள் மற்றும் தார்பாய்கள் கொடுத்து உதவினர். கடும் பனியிலும், மழையிலும் போராட்டத்தை கைவிடாமல் நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் பெய்த திடீர் மழையின் காரணமாக இளைஞர்கள் பலர் அவிநாசி சாலையில் உள்ள சாலை ஓரங்களில் படுத்தும் வருகின்றனர்.



மேலும், நேற்று மாலை தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஆளுநர் முயற்சியில் ஜல்லிகட்டிற்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பின் இந்த அவசர சட்டம் நிரந்தரம் அல்ல என்றும் தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்க்கு நிரந்தர சட்டம் வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தமிழக முழுவதும் உள்ள போராட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...