'மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையே இளைஞர்களின் போராட்டத்திற்கு காரணம்', மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோவையில் பேட்டி.



ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறும் இளைஞர்களின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.

கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதுடன், மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான  அவசர சட்ட நடவடிக்கையை மத்திய, மாநில அரசகள் ஏன் முன்னதாகவே எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிவர், நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மிருகவதை தடை சட்டத்தில் அடிப்படையிலேயே திருத்தம் கொண்டு வந்திருக்கலாம் என்றார். இளைஞர்களின் கோரிக்கையான ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு,  சட்டத்திருத்தம் தேவை என்று வலியுறுத்திய அவர், இளைஞர்களின் இந்த எழுச்சி போராட்டம் மக்களின் வாழ்வாதார பிரச்சனைக்கும் தேவை என்றார்.

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பொதுப்பணித்துறையின் ஆய்வு அறிக்கையை தெரிவிக்க வேண்டும்எ ன்று கேட்டுக்கொண்ட அவர் தடுப்பணை கட்டுவது உண்மை என்ற பட்சத்தில் மாநில அரசின் மக்கள் பிரச்சினைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உடன் இருக்கும் எனவும் கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...