பீட்டா அமைப்பின் பூர்வா ஜோஸ்புராவின் உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு செய்து எரித்த மலைவாழ் மக்கள்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டில் மாடுகள் துன்புறுத்தபடுவதாக கூறி அமெரிக்காவை சேர்ந்த பீட்டா அமைப்பினர் தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த தடை உத்தரவு பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிகட்டுக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடைபெறும் என்றிருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனதினர் என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. 



இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த ஆனைகட்டி ஆலமரமேடு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த தடையாக இருக்கும் பீட்டா அமைப்பின் தலைமை நிர்வாகி அதிகாரி பூர்வா ஜோஸ்புராவின் உருவ பொம்மைக்கி நெற்றியில் 1ரூபாய் நாணயம் திலகமிட்டும், செருப்பு மாலை அணிவித்து பாடையில் சுமந்து இறுதி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.



பட்டாசுகள் வெடித்தும் ஒப்பாரி வைத்தும் சுமந்து சென்றவர்கள் உருவ பொம்மை மீது கோக் குளிர்பானம் மற்றும் மண் எண்னெய் ஊற்றி உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிகட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பீட்டா அமைப்பு மீண்டும் தலையிட்டால் உருவ பொம்மையை எரித்தது போல பீட்டா அமைப்பின் தலைமை அதிகாரியையும் எரிப்போம் என ஆக்ரோஷத்துடன் தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...