மஞ்சள் விலை நிலையாக இருக்கும் என தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல்

இந்தியா, உலகின் முன்னணியில் மஞ்சள் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக இருக்கிறது. நாட்டின் மஞ்சள் உற்பத்தியில் தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும்  ஒரிசா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. 

தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் ஆகியவை மஞ்சள் பயிரிடப்படும் முக்கிய மாவட்டங்களாகும்.

இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த மஞ்சள் உற்பத்தியில் 80 சதவிகிதம் இந்தியாவிலேயே நுகர்வு செய்யப்படுகிறது. மீதமுள்ள மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், ஈரான், மலேசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐக்கிய அரசு நாடுகள் ஆகிய வெளிநாடுகளுக்கு மஞ்சள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தொடர் வறட்சியினால் மஞ்சள் உற்பத்தி குறைந்துள்ளது. வர்த்தக மூலங்களின் படி, தமிழ்நாட்டில் 7 லட்சம் மஞ்சள் மூட்டைகள் நல்ல விலையை எதிர்பார்த்து இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு பருவத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மஞ்சள் உற்பத்தி அதிகரித்துள்ளதாக வர்த்தக மூலகங்கள் தெரிவித்துள்ளன. 

தமிழ்நாட்டில் தற்போது மஞ்சள் வரத்து அந்தியூர், பவானி, சத்தியமங்கலம் மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் இருந்து வருகிறது. மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் உற்பத்தி குறைந்தாலும், மஹாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் மஞ்சள் வரத்து தமிழ்நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, கடந்த 20 ஆண்டுகளாக ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மஞ்சள் விலையை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்புத் திட்டம், ஆய்வு செய்து சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.  

ஆய்வு முடிவின் அடிப்படையில் தரமான மஞ்சளின் பண்ணை விலை அறுவடையின் போது (பிப்ரவரி- மார்ச், 2017) குவிண்டாலுக்கு ரூ.8,200 முதல் ரூ.8,500 வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

எனவே, விவசாயிகள் மேற்கண்ட விலை முன்னறிவிப்பின்படி விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்தான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641003 என்ற முகவரிக்கோ அல்லது 0422-2431405 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்புகொள்ளலாம்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...