ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பின் கொடும்பாவியை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்திய கோவை மக்கள்


ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பை கண்டித்து கோவை திருமலையாம்பாளையம் பகுதி பொதுமக்கள் பீட்டா அமைப்பின் கொடும்பாவியை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.



ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.



இந்நிலையில், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி கோவை திருமலையாம்பாளைய பொதுமக்கள் பீட்டா அமைப்பின் கொடும்பாவியை பாடையில் எடுத்து சென்று செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உடனடியாக ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் அல்லது முதல்வர் பன்னீர் செல்வம் பதவி விலக வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.





சட்டக்கல்லூரி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மத்திய தொலைத்தொடர்பு அலுவலகத்திற்குள் புகுந்து பீட்டாவை தடை செய்யவும், மத்திய மாநில அரசுகள் அவசர சட்டத்தை கொண்டு வர வலியுறுத்திம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரைமணி நேரம் போராட்டம் நடைபெற்றதால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.

கோவை தொப்பம்பட்டி மற்றும் சின்னத்தடாகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பீட்டா அமைப்பை தடை செய்யவும், ஜல்லிகட்டிற்கு உடனே அரசு ஆணை வழங்கவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் உண்ணாவிரதமிருந்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...