மாநகராட்சி கட்டண கழிப்பிடங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்திலும் மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணங்கள் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிம இனங்களுக்கு மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். 

மேலும், மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்கள் அறிவிப்புப் பலகையில் நன்கு தெரியுமாறு வைக்கப்பட்டு, அறிவிப்பு பலகையில் குறிப்பிட்டுள்ள தொகையை மட்டுமே குத்தகைதாரர்கள் வசூல் செய்ய வேண்டும். 

மேலும், நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் குத்தகைதாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, குத்தகை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...