வ.உ.சி மைதானத்தில் இரவிலும் தொடர்ந்த போராட்டத்தால் பரபரப்பு!


கோவை, வ.உ.சி., மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி இளைஞர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறது.





இந்த போராட்டத்தை கலைக்கும் நோக்கில் காவல் துறை 'ஜாமர்' மூலம் செல்போன் இணைப்புகளை துண்டித்தும், மின்தடை செய்யவும் முடிவெடுத்தாகவும், இதன், மூலம் போராட்டக்கார்களின் மீது தடியடி நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.



அதேபோல், இரவு 8 மணி அளவில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வ.உ.சி. மைதானத்திற்கு குவிந்தனர். சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் அமல்ராஜ் வந்தடைந்தார். போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதை தவிர்ப்பதற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாத வகையிலும் போராட்டங்கள் நடைபெறும் வகையில் அப்பகுதிக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது.



இரவு நேரங்களிலும் தொடர்ந்த போராட்டத்தில் ஐந்து ஆயிரத்திக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவினை அளித்து வருகின்றனர். இவர்களுக்கு இரவு உணவுகளும் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மூலமாகவும் மைதானத்தில் ஆங்காங்கே உணவுகள் வழங்கப்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...