ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் ஸ்பெய்ன் நாட்டுக்காரர்!


ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை, கோவை, மதுரை, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இன்று தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், மாணவர்கள் பேரணி, உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை வஉசி மைதானத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணைந்து பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டதில், ஸ்பெய்ன், பிலிப்பைன்ஸ், மங்கோலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போராட்டம் குறித்து இதில் ஈடுபட்டுள்ள ஸ்பெய்ன் நாட்டை சேர்ந்த மொரிசியோ என்பவர் "சிம்ப்ளி சிட்டி"க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



நான் எனது நண்பர்களுடன் தன்னார்வ தொண்டு நிறுவன பணிக்காக இந்தியா வந்தேன். இங்கு ஜல்லிக்கட்டுக்கு தடை இருப்பதையும், அதற்கு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதையும் அறிந்து கொண்டு இங்கு வந்தேன். 

எங்க ஊர் காளை சண்டை மிகவும் பிரபலம். இருந்த போதும் மக்களை மீறி அங்கு எதுவும் நடக்காது. 5 காளைகளை விளையாட்டின் போது கொலை செய்வார்கள். அங்கு அது பாரம்பரிய விளையாட்டு என்பதால் அந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்படவில்லை. 

ஆனால், எனக்கு தெரிந்த வரையில், ஜல்லிக்கட்டு என்பது அமைதியான முறையில் காளைகளை தழுவி விளையாடும் விளையாட்டு. இங்கு காளைகள் கொல்லப்படுவதில்லை. அதனால் ஜல்லிக்கட்டு இங்கு கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டிற்காக திரண்ட கூட்டத்தை பார்த்து நானும் நண்பர்களும் காளைகள் போல் மிரண்டு போனோம்" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....