இந்தியாவில் பீட்டாவை தடை செய்ய மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதாக - பாஜக, மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்


இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்ய அனைவரும் போராட வேண்டுமெனவும், பீட்டாவை தடை செய்ய மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன், உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு சாதகமான தீர்ப்பு வருமென எதிர்பார்த்து இருந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 2012 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்த போது தான்  ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டதாகவும், ஜல்லிக்கட்டு உரிமை பறிபோன போது கூட்டணியில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் வெளியே வராத திமுக உள்ளிட்ட யாருக்கும் தற்போது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை விமர்சனம் செய்ய தார்மீக உரிமையில்லை என தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வந்தால் நிரந்தர தடை விதிக்க வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், தற்போது கூட நம்பிக்கையுடன் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய பாஜக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தினால் தமிழக அரசை கலைக்க வேண்டுமென குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத பீட்டா அமைப்பிற்கு எந்த உரிமையும் இல்லை என கூறிய அவர், இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்ய அனைவரும் போராட வேண்டுமெனவும், அதற்கு பாஜக அரசும் முயற்சி செய்யுமென தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்காக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டுமென கூறுவது சரியானது அல்ல எனவும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களை மத்திய பாஜக அரசு ஏமாற்றவில்லை என கூறிய தமிழிசை செளந்திரராசன், தமிழ் உணர்வில் பாஜக யாரை விடவும் குறைந்தவர்கள் இல்லையென தெரிவித்தார்.   

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...