மத்திய அரசு அனுமதி தராவிட்டால் தடையைமீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என ஒன்றிணைந்த கோவை வாழ் மக்கள்


தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி தென்தமிழகத்தின் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு எனப்படும் தமிழர்களின் வீரவிளையாட்டு நடத்தப்படுவது வழக்கம். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் தொன்மையான விளையாட்டுகளில் ஒன்றாகும். மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. இதைக் காண வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்துக்கு வருகை தருவர்.



இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் என்றழைக்கப்படும் பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.



இதைத்தொடர்ந்து, இந்த தடையை நீக்கிவிட்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கூறி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட லட்சக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த இரண்டு வருடமாக நடத்தமுடியாமல் உள்ள தமிழர்களின் ஜல்லிக்கட்டை இவ்வருடன் நடத்தியே ஆக வேண்டும் என பலரும் முயற்சித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, வரும் பொங்கல் தினங்களில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்து கோவை மாவட்டம், அவினாசி சாலையில் அமைந்துள்ள கொடிசியா வளாகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட கோவை மக்கள் இன்று ஒன்றிணைந்துள்ளனர்.



மத்திய அரசு ஜல்லிக்கட்டை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவோம், பீட்டாவும், மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடைபிடித்து வரும் பிடிவாதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாரும், முழக்கங்களை எழுப்பியவாரும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....