' பொங்கல் பண்டிகையன்று தமிழர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும்' இயக்குனர் தங்கர்பச்சன்


வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையன்று  தமிழர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சன் கோவையில் ந்டந்த பொங்கல் விழாவில் உருக்கமாக பேசினார்.

கோவை ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழகறிஞர் சங்கத்தின் சார்பில்  இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இதன்  ஓரு பகுதியாக நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சன் கலந்து கொண்டு பேசினார்.தற்போது மக்கள் நல்ல உணவு கிடைக்காமல் நஞ்சு கலந்த உணவையே உன்னுவதாகவும் இதற்கு காரணம் விவசாய நிலங்கள் அழிக்கபட்டு மனைகளாக உருவாகி வருவதால் விவசாயம் அழிந்து வருவதாக பேசியவர் தற்பொழுது 60 சதவீதம் கழிப்பிட வசதிகள் இல்லாத நிலை உள்ளதாகவும் ஏவுகனை தயாரிப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு என செலவு செய்து வரும் அரசு விவசாயதிற்கு 3.5 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்குவதாகவும் அரசு வழங்கும் இலவச பொருட்களை வாங்க கையேந்தும் நிற்பது தான் தமிழனின் நிலை என்றார்.விவசாயிகளை காப்பாற்ற மத்திய அரடு திட்டம் போட்டு பணம் ஒதுக்குகிறது.ஆனால் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் திட்டங்களை செயல் படுத்துவதில்லை என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகளின் மரணத்தில் அக்கறையில்லாமல் பொழுது போக்கில் நாட்டம் கொண்டு தமிழர்கள் இருந்து வருகின்றோம் என தெரிவித்தார்.மேலும் வறட்சியால் 17  விவசாயிகள்  மட்டுமே உயிரிழந்ததாக தமிழக அரசு சொல்லுவது தவறானது எனவும் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் படி காவிரி நதி நீர் ஆணையம் அமைக்க மத்திய அரசை அனைத்து கட்சிகளும் ஓருங்கிணைந்து வலியுறுத்தவில்லை எனவும்  விவசாயிகளுக்கு பாதிப்பு வந்தால் பொதுமக்கள் அழிந்து போவார்கள் என தெரிவித்த தங்கர்பச்சன், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வறட்சியால் இறந்தவர்களின் உண்மையான கணக்கினை  வெளியிட வேண்டும் எனவும் அப்போதுதான் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய முடியும் எனவும் முழு நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின்  உயிரிழப்புகளை மறைப்பதால்  தமிழர்களுகும் தமிழகத்திற்கும்தான் பெரிய இழப்பு எனவும் தெரிவித்த அவர், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையன்று  தமிழர்கள் ஓவ்வொருவரும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.இப்போதைய சூழலில்  விவசாயிகளின் உயிரை பாதுகாப்பது முக்கியமானது எனவும், ஜல்லிகட்டும் அவசியம்தான் எனவும் தங்கர்பச்சன்  தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....