மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட குறைந்தபட்ச கூலியை வழங்கக் கோரி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மாவட்டத்தின் மக்கள் தொகைக்கேற்ப புதிய துப்புரவாளர்களுக்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியை அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பட்டத்திற்கு சங்கத்தின் துணைச் செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். இதில், அனைத்து ஊராட்சி அமைப்புகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடவேண்டும். மாவட்டத்தின் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். நிரந்திர பணிக்கு ஆட்களை எடுக்கும்போது ஒப்பந்த பணியில் உள்ள ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் என்கிற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமலாக்கப்படவேண்டும்.

அதேபோல துப்புரவு பணிகளில் ஈடுபடுகிற ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த குறைந்த பட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு 300 ரூபாயை மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்துமட்ட ஊழியர்களுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக ஒத்தக்கால்மண்டப பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் தராமல் நிர்வாகம் இழுத்தடித்தது. இதனை கண்டித்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்சியர் அறிவித்த ஊதிய உயர்வோடு வழங்கப்பட்டது. 

இதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அப்பகுதி தொழிலாளர்கள் மற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....