தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

தமிழகத்தில் வறட்சி ஆய்வு பணிகள் கண் துடைப்பிற்காக நடப்பதாகவும், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து ஒரு வார காலத்திற்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயிகள் காய்ந்த தேய்காய்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வந்த விவசாயிகள், தமிழகம் வறட்சியின் கோர பிடியில் சிக்கி தவித்து வருவதால் கடந்த சில நாட்களில் மட்டும் 128 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் விவசாயிகள் வறட்சியினால் தான் உயிரிழந்து இருப்பதாக தமிழக அரசு ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என குற்றம்சாட்டினர். 

மேலும், கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய விவசாயிகள், வறட்சி ஆய்வு பணிகள் கண் துடைப்பிற்காக நடத்தப்படுவதாகவும், ஆய்வு பணிகள் முறையாக நடக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர். 

வறட்சி ஆய்வு பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமெனவும், தமிழகத்தை உடனடியாக வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். 

மேலும், ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, மரணமடைந்த விவசாயிகள் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....