வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் கோவையில் மோசடி


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சச்சஸ் இன்டர்நேசனல் பிசினஸ் சொலியூசன் என்னும் நிறுவனம் இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி விட்டதாக கோவை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை ஆணையர் லட்சுமியிடம் தேனியைச் சேர்ந்த ராஜா என்பவர் மனு அளித்துள்ளார். 

அம்மனுவில், கோவை மாவட்டம் சௌவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த சச்சஸ் இன்டர்நேசனல் பிசினஸ் சொலியூசன் என்னும் நிறுவனத்தினர் ஸ்ரீகாந்த் மற்றும் சுரேஷ் ஆகியோர் கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தேனி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறினர். 

இதற்காக 60 லட்சம் ரூபாய் வரை என்னைப் போன்று சுமார் 34-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் இருந்து முன்தொகையாக பெற்று அதற்கு ரசீதும், சில ஆவனங்களையும் வழங்கினர். அவ்வாறு பணம் செலுத்தியவர்கள் மூன்று மாதத்தில் வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவர் என அறிவித்தனர்.

இவ்வாறு பணம் செலுத்தி பல மாதம் கடந்தும் வேலைவாய்ப்பு வழங்கவில்லை. அதுவிசயமாக விசாரிக்க வந்த போது மேற்குறிப்பிட்ட நிறுவனம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர்களது அலைபேசியும் துண்டித்து வைத்துள்ளனர். 

இதனால், எங்களுக்கு அந்நிறுவனத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு எங்களது பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...