வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் கோவையில் மோசடி


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சச்சஸ் இன்டர்நேசனல் பிசினஸ் சொலியூசன் என்னும் நிறுவனம் இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி விட்டதாக கோவை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை ஆணையர் லட்சுமியிடம் தேனியைச் சேர்ந்த ராஜா என்பவர் மனு அளித்துள்ளார். 

அம்மனுவில், கோவை மாவட்டம் சௌவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த சச்சஸ் இன்டர்நேசனல் பிசினஸ் சொலியூசன் என்னும் நிறுவனத்தினர் ஸ்ரீகாந்த் மற்றும் சுரேஷ் ஆகியோர் கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தேனி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறினர். 

இதற்காக 60 லட்சம் ரூபாய் வரை என்னைப் போன்று சுமார் 34-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் இருந்து முன்தொகையாக பெற்று அதற்கு ரசீதும், சில ஆவனங்களையும் வழங்கினர். அவ்வாறு பணம் செலுத்தியவர்கள் மூன்று மாதத்தில் வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவர் என அறிவித்தனர்.

இவ்வாறு பணம் செலுத்தி பல மாதம் கடந்தும் வேலைவாய்ப்பு வழங்கவில்லை. அதுவிசயமாக விசாரிக்க வந்த போது மேற்குறிப்பிட்ட நிறுவனம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர்களது அலைபேசியும் துண்டித்து வைத்துள்ளனர். 

இதனால், எங்களுக்கு அந்நிறுவனத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு எங்களது பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...