கோவையிலுள்ள குருத்வார சிங் சபா சார்பில் குரு கோபிந்த் சிங் 350வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


உலக முழுவதும் உள்ள சீக்கிய மக்கள் வரும் ஜனவரி 5ம் தேதி அன்று குரு கோபிந்த் சிங் 350வது பிறந்தநாள் விழா கொண்டாட இருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள குருத்வார சிங் சபா சார்பில் குரு கோபிந்த் சிங் 350வது பிறந்தநாள் விழா இம்மாதம் 28ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதிவரை கொண்டாடவுள்ளனர். சீக்கிய மதகுரு மக்கள் ஒன்றிணைந்து ஜனவரி 1ம் தேதி அன்று குருத்வார சிங் சபாவில் இருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் மூலம் ஊர்வலமாக கொண்டு  அப்பகுதியை சுற்றி மீண்டும் குருத்வார சிங் சபாவிற்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட சீக்கிய மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



பின்னர், ஜனவரி 2ம் தேதி குருத்வார சிங் சபாவில் ராஹி ஜாத பாய், குருப்ரீத் சிங், பல்பிர் சிங் ஆகியோரின் கீர்த்தனை பக்தி பாடல்கள் மாலை 7:30 மணி முதல் 9:30 நடைபெறவுள்ளது. ஜனவரி 4ம் தேதி சீக்கிய குரு சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  அதனை தொடர்ந்து குருத்வார சிங் சபாவில் ஜனவரி 3-5ம் தேதி வரை சீக்கிய குருமார்கள் குரு கரந்த் சாஹிப் புனித நூல் படித்தல், மற்றும் இறுதிநாளில் குருநானக் கீர்த்தனா மண்டல் சார்பில் கீர்த்தனைகள் இசைக்கப்படவுள்ளது. மேலும் ஜோஹிந்தர் சிங், திலோக் சிங், ராஹி ஜாதா மற்றும் பல்பிர் சிங் ஆகியோரின் கீர்த்தனா இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கோவையில் 1970ல் சீக்கிய மதத்திற்க்காக கோவில் கட்டப்பட்டது. இன்று குருத்வார சிங் சபா உறுப்பினர்களாக 60க்கும் மேற்பட்டோர் உள்ளனர். குருத்வார சிங் சபா 2017ம் ஆண்டுடன் 50ம் ஆண்டு பொன்விழா கொண்டாட உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...