ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய அரசு அவசர சட்டம் இயற்றக்கோரி - அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரிய தமிழர் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற மத்திய அரசு அவசர சட்டம் இயற்றக்கோரி, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், ஜல்லிகட்டு மாட்டுடன் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர். மத்திய பா.ஜ.க அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...