டொனால்டு டிரம்புடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்பை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்தித்து பேசினார். மன்ஹட்டன்  நகரில் உள்ள டிரம்ப் டவரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 90 நிமிடங்கள் இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர்.

இந்த  சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அபே, நம்பிக்கையின் அடிப்படையில் உறவை கட்டமைக்க முடியும் என்று இந்த சந்திப்பு என்னை உறுதியாக நம்ப வைத்துள்ளது. அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்து பேசியதால் பேச்சுவார்த்தை இடம் பெற்ற அம்சங்கள் குறித்து நான் வெளியிட முடியாது. நம்பிக்கை இல்லாமல் கூட்டு ஏற்படாது. அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் நம்பகமான தலைவர் என்று தற்போது நம்பிக்கை உள்ளது. பேச்சுவார்த்தை தெளிவான முறையில் இருந்தது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.இரு தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது, அபேவுடன் ஒரு மொழிபெயர்ப்பாளரும் டிரம்புடன் அவரது மகள் இவாங்காவும் உடன் இருந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, டொனால்டு டிரம்ப் ஜப்பானுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார். ஜப்பான் அணு ஆயுதம் வாங்குவது குறித்து கவலை தெரிவித்த டிரம்ப், அமெரிக்க படைகள் வெளி நாட்டு மண்ணில் இருக்க வேண்டும் என்றால் அதிக தொகை செலுத்த வேண்டும் அல்லது படைகள் வாபஸ் பெற நேரிடலாம் என பேசி இருந்தார்  அதேபோல் அமெரிக்கா தலைமையிலான 12 நாடுகள் கூட்டமைப்பான டிரான்ஸ்- பசுபிக் கூட்டுறவு (TPP) க்கு எதிராகவும் பேசி இருந்தார். டிரான்ஸ்-பசுபிக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் அதிபர் ஒபாமாவுடன் ஷின்சே அபே மிகவும் நெருக்கமாக பணியாற்றினார் என்பது கவனிக்கத்தக்கது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....