வாகன நிறுத்துமிடம், கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூல்- அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட எம்டிபி ரோடு புதிய பேருந்து நிலையத்திலுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், நவீன கட்டண கழிப்பிடத்திலும் அதிக கட்டணம் வசூல் செய்த குத்தைகைதாரர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் மற்றும் சிறப்பு வரி ஆய்வாளர் ஆகியோர் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட எம்டிபி ரோடு புதிய பேருந்து நிலையத்திலுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், நவீன கட்டண கழிப்பிடத்திலும் செப்டம்பர் 7 மற்றும் நவம்பர் 12 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, வாகன கட்டணம் விபரப் பெயர் பலகை வைக்கப்படாதது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பெயர் பலகை வைக்கும் படி அறிவுத்தப்பட்டது.

மேலும், நவ. 15 ம் தேதியன்று ஆய்வு செய்யப்பட்ட போதிலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், நவீன கட்டண கழிப்பிடத்திலும் கட்டண பெயர் பலகை வைக்கப்படவில்லை. 

மேலும், அதிக கட்டணம் வசூல் செய்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன குத்தைகைதாரர் சாந்தகுமார் என்பவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அபராதமாக ரூ.20 ஆயிரம், நவீன கட்டண கழிப்பிடத்தின் குத்தைகைதாரர் ஜமேஷா என்பவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இது போன்ற தவறுகள் தொடரப்பட்டால் குத்தகைதாரர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவர்களுடைய பெயர்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பதுடன், செலுத்திய தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி நிதியில் சேர்க்கப்பட்டும் என்றும் அந்த இடத்தின பொது மின் ஏலத்தில் விடப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....