ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவன பேராசிரியர்களின் ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்திய பல்கலைக் கழக மானியக் குழு

பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி), கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் 5 பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி நிதி உதவியினை வழங்கி தாங்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்த உதவியுள்ளது.

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்படும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மூன்று பேராசிரியர்கள் ஆர்.சௌந்திரராஜன், சுஜரிதா மற்றும் பிரபா ஆகியோர் மூன்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்பித்ததற்கு பல்கலைக் கழக மானியக் குழு ஒப்புதல் அளித்தது. மேலும் அந்த ஆராய்ச்சித் திட்டத்தை மேற்கொள்ள ரூபாய் 4 லட்சத்து 70 ஆயிரம், 2 லட்சம், 95 ஆயிரம் என முறையே வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அதே வளாகத்தில் செயல்பட்டு வரும் கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் பிரசன்னாவிற்கு 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ஆராய்ச்சி நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கோவைப்புதூரில் இயங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பொறியியல் துறை பேராசிரியர் சுந்தர்ராஜூக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆராய்ச்சியினை தொடர பல்கலைக் கழக மானியக் குழு வழங்கியுள்ளது.

இக்கல்விக் குழுமங்களின் பேராசிரியர்கள் மொத்தம் 11 லட்சத்திற்கும் மேல் ஆராய்ச்சி நிதியினைப் பெற்று பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

இவர்களை இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், இக்கல்விக் குழுமங்களின் முதல்வர்கள் ஜே.ஜேனட், ஏ.ரமேஷ், பி.பாபாஞானகுமார், துறைத் தலைவர்கள் ஆசோக்வர்த்தன், ஜெகதீஸ்குமார், நடராஜன், சுமதி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து ஆராய்ச்சியினை மேற்கொள்ள ஊக்கப்படுத்தினர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....