அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட போவதில்லை: இந்திய அமெரிக்கர் நிக்கி ஹாலே அறிவிப்பு

அமெரிக்க துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்டு டிரம்பிற்கு ஆதரவளிப்பேன் என்றும் தெற்கு கரோலினா மாகாணத்தின் குடியரசு கட்சி ஆளுநர் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.

இந்திய அமெரிக்கரான ஹாலே கூறும்பொழுது, மக்களின் நம்பிக்கை மீது மிக பெரிய மதிப்பு வைத்துள்ளேன்.  அதனை நான் எப்பொழுதும் கூறி வந்துள்ளேன்.  ஜனாதிபதிக்கான குடியரசு கட்சி வேட்பாளரை நான் ஆதரிப்பேன் என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவதால் நவம்பர் 8-ந் தேதி புதிய ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், மாகாணங்களில் நடந்து வருகின்றன.

இண்டியானா மாகாணத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரு கட்சிகளிலும் வேட்பாளர் தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் (வயது 69) அமோக வெற்றி பெற்றார்.

இதனை அடுத்து இந்த தேர்தலில் தோல்வி அடைந்த டெட் குரூஸ் போட்டியில் இருந்து விலகினார்.  இதனால் டிரம்ப் உத்தேச வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.  இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து ஜான் காசிக் விலகியதை அடுத்து டிரம்ப் அதிகாரபூர்வ வேட்பாளராகியுள்ளார்.  வருகிற ஜூலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்படுவார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....