இந்திய மருத்துவர் சங்கத்தை கலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

இந்திய மருத்துவர் சங்கத்தை கலைத்து தேசிய மருத்துவர் சங்கத்தை உருவாக்க முயலும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் இந்திய மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவர் சங்கத்தை கலைக்க முயலும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய மருத்துவர் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை புரூக் பாண்ட் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலகம் முன்பாக அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட இந்திய மருத்துவ சங்கத்தை கலைத்து, தேசிய மருத்துவச் சங்கத்தை உருவாக்க மத்திய அரசு முயல்வதாகவும், அவ்வமைப்பில் 20 உறுப்பினர்களில் 15 பேரை நியமன முறையில் மருத்துவர் அல்லாதவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதிகரித்து வரும் மருத்துவர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், இந்திய மருத்துவ சங்கத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....