ரூபாய் நோட்டுகளுக்கு திடீர் தடையினால், மக்கள் அவதி -ஜி.கே வாசன்

அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் நவம்பர் 30ம் தேதி வரை பழைய நோட்டுகள் செல்லாது என்ற விதிமுறையை தளர்த்த வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்டதில் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் நவம்பர் 30 ம் தேதி வரை பழைய நோட்டுகள் செல்லாது என்ற விதிமுறைகளை தளர்த்த வேண்டுமெனவும், அப்படி செய்தால் மட்டுமே வணிகர்களும், சிறு தொழில் முனைவோர்களும் தங்களது வாழ்வதாரத்தை காப்பற்றி கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார். 

மேலும், ரயில் நிலையம், விமான நிலையம், தனியார் மருத்துவமனை, மருந்து கடை உள்ளிட்டவற்றில் அரசு உத்தரவுப்படி 500, 1000 ரூபாய் தாள்களை பெற்று கொள்ள வேண்டுமெனவும், அதனை பின்பற்றாதவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வெறும் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வைத்து சாதரண மக்கள் வாழ முடியாது எனவும், 2 ஆயிரம் ரூபாய் தாள்களுக்கு பதிலாக 500 தாள்களை அச்சிட்டு வெளியிட்டு இருந்தால் சாதரண மக்கள் பயன்பெற்று இருப்பார்கள் எனவும் ஜி.கே.வாசன் கூறினார். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை விவகாரத்தில் விரைவில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று ஆட்சி பணிக்கு திரும்ப பெற வேண்டுமென்பதே தமது விருப்பமென அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....