நாசிக் அச்சகத்தில் இருந்து 50 லட்சம் புதிய ரூ.500 நோட்டுகள்

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அச்சகத்தில் 50 லட்சம் புதிய ரூ.500 நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரூ.500, 1,000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு நவ., 8 ம் தேதி அறிவித்ததை அடுத்து, நாடு முழுவதும் அன்றாட செலவுகளுக்கான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்.,களில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்களின் இந்த சிரமத்தை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‛மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள கரன்சி நோட்டு அச்சகத்தில் இருந்து 50 லட்சம் புதிய ரூ.500 நோட்டுக்கள் அச்சடித்து, வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 50 லட்சம் நோட்டுக்கள் நவ., 16ம் தேதி விநியோகத்திற்கு அனுப்பப்பட உள்ளன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஒன்பது அச்சகங்களில் நாசிக் அச்சகமும் ஒன்று. இங்கு ரூ.20, 50, 100 நோட்டுக்களும் அதிக அளவில் அச்சிடப்பட்டு வருகிறது. அரசு புதிதாக அறிமுகப்படுத்திய ரூ.2,000 நோட்டுக்கள் மட்டுமே இதுவரை புழக்கத்திற்கு வந்துள்ளன. புதிய ரூ.500 நோட்டுக்களும் தங்குதடையின்றி கிடைப்பதற்காக அதிக அளவில் அச்சிடப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....