ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதாகக் கூறி பெண்ணிடம் நூதன மோசடி- வாலிபர் கைது


கோவை மாவட்டம், பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி ஜோதி (42) கடந்த மாதம் 22ம் தேதியன்று கிராஸ்கட் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பணம் வராதநிலையில், அருகில் இருந்த இளைஞர் உதவுவதாகக் கூறி ஜோதியின் ஏடிஎம் அட்டையினை பயன்படுத்தி ஒரு தொகையினை எடுத்து கொடுத்துள்ளார். பின், ஜோதியின் ஏடிஎம் அட்டைக்கு பதிலாக தான் கொண்டுவந்திருந்த போலி ஏடிஎம் அட்டையினை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், ஜோதியின் கைபேசிக்கு ஏடிஎம் மையத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுத்திருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் வங்கிக்கு சென்று விசாரித்தபோது, அந்த நபர் போலி அட்டை கொடுத்து ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக, காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த ஏடிஎம் அட்டை கடைசியாக பயன்படுத்தப்பட்ட பகுதியினைக் கொண்டு இந்த நூதனமோசடியில் ஈடுபட்டவரை பிடித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவரது பெயர் செந்தில்குமார் (32) என்பதும், ஆனைமலை அடுத்த தெற்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....