முதல்வர் குணமடைய வடஇந்தியர்கள் சிறப்பு வழிபாடு


தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி கோவையில் வடஇந்திய சமாஜ் அமைப்பினர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட உள்ளனர்.

தமிழக முதல்வர் உடல் நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக, உறுப்பினர்களும், தொண்டர்களும் ஆங்காங்கே பல்வேறு விதமான வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சேவா ஆசிரமத்தில் வடஇந்தியர் சமாஜ் அமைப்பினர், முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி ஞாயிறன்று (இன்று) சிறப்பு பிரார்த்தனை நடத்த உள்ளனர். இதுகுறித்து நம் நிருபரிடம் அந்த அமைப்பின் தலைவர் சரவன் போத்ரா கூறுகையில்,

''முதல்வர் குணமடைய வேண்டி இன்று புனித பிரார்த்தனை, மகாருத்ரா அபிஷேகம், மகா மிருத்துஞ்சேயா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பிரார்த்தனைகளும், அன்னதானமும் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், அமைச்சர் நாகராஜ், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி. அருண் குமார் ஆகியோர் பங்கேற்று வழிபாட்டில் ஈடுபட உள்ளனர். 

மேலும் இதில், கோவையில் உள்ள வட இந்தியர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது'' என தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...