காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது - தமிழிசை சௌந்தரராஜன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  பேசியதாவது:-

''காவிரி விவகாரம் தொடர்பாக திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்வை ஏற்படுத்தாது. அரசியல் காரணங்களுக்காக காலதாமதமாக நடத்தப்படும் இந்த அவசியமற்ற கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளாது. 

3 தொகுதி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடாதது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தமிழக மக்களின் ஆதரவு உள்ளதாகக் காட்டிக் கொள்ளும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடதுசாரி தலைவர்கள் ஏன் தேர்தல் களத்தில் இறங்க பயப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையுடனும், நடுநிலையுடனும் தேர்தலை நடத்த வேண்டும். மக்களின் ஆதரவுடன் மாற்று சக்தியாக பாஜகவை அடையாளப்படுத்தும் வகையில் பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிடும் 3 பேர் பட்டியலை பாஜக மத்திய தலைமைக்கு அனுப்பி உள்ளது. மத்திய தலைமையின் ஒப்புதலுக்கு பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 

மேலும், பணப்பட்டுவாடா செய்த புகாரில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதிகளில் மீண்டும் அதே வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்திருப்பது ஜனநாயகத்தை திராவிட கட்சிகள் மதிப்பதில்லை என்பதை காட்டுவதாக உள்ளது. தலாக் முறை பெண்ணுரிமைக்கு எதிரானது, இம்முறைக்கு இஸ்லாமிய பெண்களே எதிராக உள்ளனர். மதம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் சட்டங்களை பாஜக ஏற்படுத்த முயல்கிறது என்பது தவறானது. 

தமிழக முதல்வர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பொறுப்பற்ற நிலையில் பேசி வருவது ஆரோக்கியமான நடைமுறை இல்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்திப்பு நாகரிக அரசியலின் வெளிப்பாடு. அதில் கருத்து சொல்லவோ, விமர்சனம் செய்யவோ எதுவும் இல்லை. 

சிப்பெட் தமிழகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்படாது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தை ஆளும் கட்சிகள் தகுதியான இடத்தை தேர்வு செய்யவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் நிச்சயம் அமைக்கப்படும். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை தேறி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இலங்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பின்புலத்தை ஆராய்ந்து, இதுபோன்ற செயல்களை ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்பட வேண்டும்'' என தமிழிசைசௌந்தரராஜன்   தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...