எஸ்.என்.ஆர் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை

கோயமுத்தூர், எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியில் IQAC சார்பில் "கல்வி மற்றும் நிர்வாகத் தரமேம்பாட்டுத் தணிக்கையின் சிக்கல்களும் சாவல்களும்" என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை தேசிய தர மதிப்பீட்டு குழுவின் நிதிநல்கையின் கீழ் 21.10.2016 மற்றும் 22.10.16 ஆகிய நாட்களில் நடைபெற்றது. 

இந்நிகழ்வை எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் முதல்வர் கருணாகரன் தலைமை ஏற்க, கோவை என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முத்துசாமி தொடங்கிவைத்து உரையாற்றினார். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேதியியல் துறைத் தலைவர் மற்றும் IQAC இயக்குநர் சேதுராமன் சிறப்புரை நல்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் தமிழகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சார்ந்த துறைசார் வல்லுநர்கள் பயன்பெறும் வகையிலான கருத்துக்களையும் பயிற்சியையும் வழங்கினர். 

இந்நிகழ்ச்சியில், கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து பல்வேறு துறைப் பேராசிரியர்கள், எஸ்.என்.ஆர். கல்லூரி பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுப் பயன்பெற்றனர். இந்நிகழ்வினை எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் மற்றும் IQAC ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...